ஆதார் பான் கார்டு இணைப்பிற்கு கால அவகாசம் நீடிப்பு
Sep 18, 2021, 08:15 IST
மத்திய அரசு ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலஅவகாசம் வரும் 30-ம் தேதி கடைசி நாள் என்று வருமான வரித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
கொரோனா காரணமாக பல்வேறு தரப்பட்டவர்களும் கடுமையான சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவர்கள் விடுத்த கோரிக்கைகளின் அடிப்படையில் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
From around the
web