வளர்ப்பு மகளைக் கற்பழித்த தந்தை.. 20 வயதில் இளம்பெண் வாழ்வில் சோகம்!
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. அண்ணன், தம்பி, அப்பா, மாமன், மைதுனன், பக்கத்து வீட்டுக்காரர், பெரியப்பா, வகுப்பு தோழர், ஆசிரியர், மருத்துவர் என்று பாகுபாடில்லாமல் தங்களுடைய வக்கிர புத்தியால் பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லைக் கொடுக்கும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், வளர்ப்பு மகளைக் கதற கதற கற்பழித்துள்ளார் தந்தை. இது குறித்து போலீசார், வழக்குப்பதிவு செய்து தந்தையைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் முகந்த்பூரை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் தனது தாய் மற்றும் வளர்ப்பு தந்தையுடன் வசித்து வருகிறார்.சம்பவத்தன்று பெண் வீட்டில் தனியாக இருந்தபோது, அவரது வளர்ப்பு தந்தை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதை தாயிடம் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். அந்தப் பெண் பயந்து போய் வெளியில் எதுவும் சொல்லவில்லை.கடந்த 7 மாதங்களாக இந்தக் கொடுமை தொடர்ந்ததால், ஒரு கட்டத்தில் 50 வயது வளர்ப்புத் தந்தை சித்ரவதை செய்வதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து 20 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தையை கைது செய்தனர். மேலும் மருத்துவ பரிசோதனையில் அந்த பெண் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!