அதிர்ச்சி... 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை!
கோவாவில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு கோவாவில் உள்ள வாஸ்கோவில்லில் உள்ள கட்டுமான தளத்தில் நேற்று காலை 5 வயது சிறுமி சுருண்டு விழுந்து கிடந்துள்ளார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து சிறுமியின் உடல் யார் என்று தெரியாத நிலையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த அறிக்கையின் முடிவில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளதாக தெற்கு காவல் கண்காணிப்பாளர் சுனிதா சாவந்த் தெரிவித்தார்.
மேலும், போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கொலை வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதனிடையே சந்தேகத்தின் பேரில் 20 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!