“இவ்ளோ நேரமா யாருகிட்ட கடலப் போடுற?” ஆத்திரத்துல கத்திரிக்கோலால் மனைவியைக் கொடூரமாக குத்திய கணவன்!

 
கத்தரிக்கோல்

இவ்ளோ நேரமா சொல்போன்ல யாருகிட்ட கடலைப் போட்டுக்கிட்டிருக்க என்று ஆத்திரத்தில் தன்னுடைய மனைவியைக் கத்திரிக்கோலால் கொடூரமாக குத்திய கணவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஜேபி நகரில் இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். அவரது மனைவி எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பிறகும், வீட்டில் தன்னுடன் பணிபுரியும் ஆண் ஊழியரிடம் அலுவலக வேலை தொடர்பாக பெண் நீண்ட நேரம் பேசி வந்துள்ளார்.

பெங்களூரு

இதனால், அந்த நபருடன் மனைவிக்கு தொடர்பு இருக்கலாம் என கணவர் சந்தேகம் அடைந்தார். மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த அவர், மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்று கூட அந்த பெண் தனது ஆண் நண்பருடன் அலுவலக வேலை தொடர்பாக அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த அவர் கணவன், மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.

அப்போது, ஆத்திரமடைந்த கணவர்  கத்திரிக்கோலை எடுத்து மனைவியை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அந்த பெண் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் புட்டனஹள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கும், மருத்துவமனைக்கும் சென்று விசாரணை நடத்தினர். அப்போது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த வாலிபர், அவரை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. அதன்பின் புட்டேனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞரை கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள் 

From around the web