அதிர்ச்சி... குளிருக்காக தீ மூட்டியதில் மூச்சுத்திணறி கணவன் - மனைவி உயிரிழப்பு!

 
நெருப்பு

குளிர் அதிகமாக இருந்ததால், குளிருக்காக தீ மூட்டியதில், மூச்சுத்திணறி கணவனும், மனைவியும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசு இடைநிலைக் கல்லூரியில் எழுத்தராக பணிபுரிபவர் 52 வயது மதன் மோகன் செம்வால். இவரது மனைவி 48 வயது  யசோதா தேவி. இவர்கள் இருவரும் பிலங்கானா பகுதியில் உள்ள துவாரி தப்லா கிராமத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக சென்றிருந்தனர். இந்நிலையில் இரவு 11 மணிக்கு கடும் குளிர் காரணமாக குளிர்காய்வதற்காக நெருப்பை மூட்டி அதனை அறைக்குள் வைத்து கதவை பூட்டி தூங்கி விட்டனர். 

நெருப்பு

நெருப்பில் இருந்து வெளியேறிய புகையால் தூக்கத்திலேயே இருவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். நேற்று காலையில் அவர்களது மகன் அவர்களை எழுப்ப கதவை தட்டும் போது உள்ளிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்துச் சென்று பார்த்தனர். அப்போது கணவன் மனைவி இருவரும்  படுக்கையில் இறந்து கிடந்தனர்.

நெருப்பு

இதையடுத்து தம்பதியின் உடலை உள்ளூர் மக்கள் போலீசாருக்கு தெரிவிக்காமல் தகனம் செய்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க

From around the web