ஜூலை 1-ந் தேதி எம்.பி.பி.எஸ். வகுப்பு தொடக்கம்

 
ஜூலை 1-ந் தேதி எம்.பி.பி.எஸ். வகுப்பு தொடக்கம்

புதுவையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து புதுவை, காரைக்கால் ஜிப்மர் மையங்களில் பயிலும் மருத்துவ (எம்.பி.பி.எஸ்.) முதலாமாண்டு மாணவர்கள், பி.எஸ்.சி. நர்சிங் 1, 2 மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்கள், பி.எஸ்.சி. துணை மருத்துவ மாணவர்களுக்கு வரும் ஜூலை 1-ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்க உள்ளன.

எம்.பி.பி.எஸ். 2 மற்றும் 3-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் கொரோனா தடுப்பூசியை கண்டிப்பாக செலுத்திக்கொள்ள வேண்டும். ஜிப்மர் வளாகத்தில் மாணவர்கள் இன்று (புதன்கிழமை) முதல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல் தவணை தடுப்பூசியை எங்கு செலுத்தியிருந்தாலும், 2-வது தவணை தடுப்பூசியை ஜிப்மர் வளாகத்தில் செலுத்திக் கொள்ளலாம்.

கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள், கொரோனா பரிசோதனைக்கு பிறகே ஜிப்மர் மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். மற்ற மாணவர்கள் நேரடியாக அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட விடுதி அறைகளுக்குச் செல்லலாம என்று புதுவை ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web