அதிர்ச்சியில் பெற்றோர்... வீட்டில் சாப்பிட்ட பின், தட்டைக் கழுவும் போது சுருண்டு விழுந்து மாணவி மரணம்!

 
லட்சுமி

கடந்த ஞாயிற்றுக்கிழமை மதிய நேரம் வீட்டில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து உணவருந்தி இருக்கிறார்கள். தன்னுடைய உணவை சாப்பிட்டு முடித்தப் பின்னர், எழுந்து சமையலறைக்கு சென்று தட்டைக் கழுவிக் கொண்டிருந்த 9ம் வகுப்பு மாணவி ஸ்ரீலட்சுமி, திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெற்றோரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த மரணத்திற்கான காரணம் குறித்து பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் தெரிய வரும் என்று போலீசார் கூறினர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், முறிக்காசேரி பகுதி, தோப்பிரம்குடியில்  கடந்த ஞாயிறு அன்று மதியம் சாப்பிட்டு விட்டு, தான் சாப்பிட்ட பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்த 14 வயது பள்ளி மாணவி திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

மாரடைப்பு

பள்ளி நகரைச் சேர்ந்த மாங்காட்டுகுன்னல் என்பவரின் மகள் ஸ்ரீலட்சுமி, தங்கமணியில் உள்ள செயின்ட் தாமஸ் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். மதியம் தனது வீட்டில் 2 மணியளவில் மதிய உணவுக்குப் பிறகு பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்த போது அவர் சரிந்து விழுந்தார்.

ஆம்புலன்ஸ்
உடனடியாக முறிக்காசேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ஸ்ரீலட்சுமி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மாணவியின் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து, மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web