கேரளாவில் மீண்டும் உயரும் பாதிப்பு.. இன்று மட்டும் 131 பேர் பலி!..
Sep 17, 2021, 18:34 IST
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 23,260 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனையில் இதுவரை 1,88,926 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 20,388 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 42,56,697 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 131 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 23,296 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 1,28,817 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
From around the
web