அதிர்ச்சி... ரயிலில் இருந்து ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை!

 
நயன்

கர்நாடகாவில் 27 வயதுடைய இளம்பெண் ஒருவர் ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து திடீரென ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம், ரயிலில் பயணித்தவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

கர்நாடகா மாநிலம் தும்கூருவைச் சேர்ந்தவர் நயன் (27). இவர் கண்ணூர் - பெங்களூரு - மங்களூரு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது, ரயில் மங்களூரு அருகே நேத்ராவதி ஆற்றுப் பாலத்தை கடந்த போது திடீரென ரயிலில் இருந்து நயன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

train

இந்த சம்பவம் குறித்து உடனடியாக பன்ட்வால் நகர காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உள்ளூர் நீச்சல் வீரர்கள் மூலம் நயனின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், ரயிலில் நயன் வைத்திருந்த உடைமைகளை போலீசார் கைப்பற்றி சோதனையிட்டனர். அதில் அவரது ஆதார் கார்டு இருந்தது. அதைவைத்து, நயனின் முகவரி உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்த போலீசார், உடனடியாக நயனின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

Police

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து எம்.ஜி.நயன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web