கோர விபத்து... பகீர் வீடியோ... லாரி மீது ஆட்டோ மோதி தூக்கி வீசப்பட்ட குழந்தைகள்!
எச்சரிக்கை... : இளகிய மனசு உள்ளவங்க இந்த வீடியோவைப் பார்க்காதீங்க. இன்று காலை, விசாகப்பட்டினத்தில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்று படுவேகத்தில் வந்து கொண்டிருந்த லாரி மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆட்டோவில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 8 குழந்தைகள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.அவர்களில் இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விசாகப்பட்டினம் சங்கம் சரத் தியேட்டர் பகுதியில் உள்ள சாலை சந்திப்பில் இந்த விபத்து நேரிட்டது. இதில் தனியார் பள்ளியைச் சேர்ந்த 8 குழந்தைகள் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
At least 8 children were seriously injured when the auto carrying them to school collided with a speeding truck in Visakhapatnam this morning. The truck driver and cleaner tried to flee but, auto drivers present there detained and handed them over to the police.#AndhraPradesh pic.twitter.com/wQtlGcujp7
— Ashish (@KP_Aashish) November 22, 2023
அதில், பள்ளிக் குழந்தைகளை ஏற்றி வந்த ஆட்டோவானது சாலை சந்திப்பு பகுதியை அதிவேகமாக கடந்து செல்ல முயன்றதும், அப்போது பக்கவாட்டிலிருந்து வந்த லாரி மீது அதிகவேகத்தில் மோதி கவிழ்ந்ததும் தெளிவாகப் பதிவாகி இருக்கிறது. இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த குழந்தைகள் வெளியே தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்துப் பார்க்கும்போது, ஆட்டோ டிரைவரின் அலட்சியத்தால் இந்த விபத்து நேர்ந்துள்ளது” எனத் தெரிவித்தனர்.
ஆட்டோ மோதிய லாரியானது விபத்து நடந்த இடத்திலிருந்து 100 மீட்டர் தள்ளி நிறுத்தப்பட்டது. லாரி டிரைவரும், கிளீனரும் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால், அப்பகுதியில் இருந்த மற்ற ஆட்டோ டிரைவர்கள், அவர்கள் இருவரையும் விரட்டிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த விபத்து குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!