ராஜஸ்தானில் இரண்டாவது நாளாக இன்றும் நிலநடுக்கம்

 
ராஜஸ்தானில் இரண்டாவது நாளாக இன்றும் நிலநடுக்கம்

ராஜஸ்தான் மாநிலம் கடந்த இரண்டு நாட்களில் இரண்டாவது முறையாக பிகானிர் பகுதியின் மேற்கு வடமேற்கில் இருந்து சுமார் 413 கிலோ மீட்டர் தொலைவில், 15 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்திய நேரப்படி இன்று 22-07-2021 காலை 07:42:15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

முன்னதாக ராஜஸ்தான் மாநிலம் பிகானிரியில் நேற்று 21-07-2021 அதிகாலை 05:24:29 மணிக்கு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.3 ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

From around the web