இளம்பெண் எரித்து கொலை... குழந்தையை சாலையில் வீசி சென்ற கள்ளக்காதலன்!
கள்ளக்காதல் உறவில் இருந்து வந்த இளைஞர், இளம்பெண்ணைக் கொடூரமாக கொலை செய்து விட்டு, பச்சிளங்குழந்தையை சாலையில் வீசிச் சென்ற கொடூரம் அரங்கேறியுள்ளது பதைபதைக்க செய்கிறது. கர்நாடக மாநிலம் தும்குரு மாவட்டம் தொட்டகுனி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் எரிந்த நிலையில் கிடந்தார். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அவர் சேலூர் கிராமத்தை சேர்ந்த ருக்ஸானா என்பது தெரியவந்தது. மேலும் அவரை மர்ம நபர்கள் கொன்று எரித்ததும் தெரியவந்தது.
இந்நிலையில் ருக்ஸானா கொலை வழக்கில் அதே பகுதியை சேர்ந்த பிரதிப் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் ருக்ஸானாவை கொன்று உடலை எரித்தது தெரியவந்தது. இருவரும் ஏற்கனவே வெவ்வேறு நபர்களை திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரும் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இருவரும் அடிக்கடி தனிப்பட்ட முறையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால், ருக்ஸானா கர்ப்பமானார்.
அதன்பின், ருக்ஸானாவிடம் இருந்து பிரதீப் வெளியேறினார். இதனிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ருக்ஸானாவுக்கு குழந்தை பிறந்தது. பிரதீப் குழந்தையின் தந்தை என்று ருக்ஸானா கூறுயுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரதீப், சில நாட்களுக்கு முன்பு ருக்ஸானாவிடம் தகராறு செய்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ருக்ஸானாவை அடித்துக் கொன்றுவிட்டு, உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். மேலும் குழந்தையை சாலையோரம் எறிந்து விட்டு சென்றார். அங்கு இருந்தவர்கள் குழந்தையை உயிருடன் மீட்டனர். இதையடுத்து போலீசார் பிரதீப்பை கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!