புரட்டாசி முடிஞ்சுது! அசைவ கடைகளில் அலைமோதிய கூட்டம்!

 
மீன் கடை மார்க்கெட் அசைவம்

புரட்டாசி மாதம் நிறைவடைந்த நிலையில், அசைவ கடைகளில் முன்பை விட அதிகளவில் மக்கள் குவிய துவங்கியுள்ளனர். சென்னை உட்பட வெளியூர்களிலும் பிரியாணி கடைகள் மீண்டும் களை கட்ட துவங்கியுள்ளது.

மீன் ஆய்வு

புரட்டாசி மாதத்தையொட்டி பெருமாளுக்கு விரதமிருந்தவர்கள் தங்கள் விரதத்தை முடித்து கொண்ட நிலையில், சென்னை காசிமேடு மீன் சந்தையிலும் ஞாயிற்று கிழமைகள் மட்டுமல்லாமல் வார நாட்களிலும் மீன்களை வாங்க கூட்டம் ஆர்வமுடன் திரள்கிறது. 

இறைச்சி மட்டன் சிக்கன்

மீன்களின் விலையும் வழக்கத்தை விட குறைந்தே காணப்பட்டது. வஞ்சிரம், வவ்வால், ஷீலா, சங்கரா, பால் சுறா, தோல்பாறை உட்பட பல வகையான  மீன்கள் அதிகம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இது தவிர அசைவ உணவகங்களிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்துள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web