’அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா’.. சூப்பராக எண்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
சட்ட மேதையும், புரட்சியாளருமான அம்பேத்கரின் 68வது நினைவு தினம் இன்று (டிச.6) அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை நத்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழா நடைபெறும் இடத்திற்கு தவெக தலைவர் விஜய் வருகை புரிந்துள்ளார். நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கிற்குள் நுழைந்ததும் சுற்றி இருந்தவர்களை நோக்கி கை அசைத்தார்.

பின்னர், மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலை முன்பு அமர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. விழா தற்போது தொடங்கியுள்ளது, இந்த புத்தக வெளியீட்டு விழாவின் மேடைக்கு வருகை தந்த தமிழ்நாடு வெற்றி கழக தலைவர் விஜய், அம்பேத்கரின் புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார். பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் புத்தக வெளியீட்டு விழாவை காண அரசியல் ஆர்வலர்கள், அரசியல் விமர்சகர்கள், தவேக தொண்டர்கள் என பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், கட்சி தொடங்கப்பட்ட பிறகு விஜய் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இதுவாகும். இந்நிலையில் தவெக கட்சி மாநாட்டிற்கு பிறகு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் விஜய் இரண்டாவது மேடையில் என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
