தமிழகத்தில் கொரோனா 3 வது அலை?!குழந்தைகளை பாதுகாக்க சிறப்பு பணிக்குழு!

 
தமிழகத்தில் கொரோனா 3 வது அலை?!குழந்தைகளை பாதுகாக்க சிறப்பு பணிக்குழு!


இந்தியாவில் கொரோனா 2வது அலை படிப்படியாக பரவலாக குறைந்து வருகிறது. ஆனால் 3 வது அலை மிக மோசமாக இருக்கலாம் எனவும், இதில் குழந்தைகள் தான் அதிகமாக பாதிக்கப்படுவர் எனவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இந்தியாவை பொறுத்தவரை அக்டோபர் மாதம் கொரோனா 3வது அலை உச்சத்தை எட்டலாம் என கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

இதன் அடிப்படையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க சிறப்பு பணிக்குழுவையும் அமைத்துள்ளது.இந்த பணிக்குழுவில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர் இடம் பெற்றுள்ளனர். அந்த வகையில் இதன் தலைவராக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 3 வது அலை?!குழந்தைகளை பாதுகாக்க சிறப்பு பணிக்குழு!


உறுப்பினர் செயலர்- எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர்.
உறுப்பினர்கள்-தேசிய சுகாதார சிறப்பு திட்ட இயக்குனர், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர், தமிழ்நாடு மருத்துவ கழக நிர்வாக இயக்குனர், மருத்துவ கல்வி இயக்குனர், கிராமப்புற சுகாதார பணிகள் இயக்குனர், பொது சுகாதார மருத்துவக் கழக இயக்குனர், ஸ்டான்லி மருத்துவ கல்லூரி குழந்தைகள் நல சிறப்பு டாக்டர், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல சிறப்பு டாக்டர், இந்திய குழந்தைகள் நல தமிழக தலைவர், செயலாளர், திருச்சி மாவட்ட குழந்தைகள் நல செயலாளர் தங்கவேலு ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்.

இந்தக் குழு கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்தும், பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகள் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் இந்த குழு உடனுக்குடன் அரசுக்கு ஆலோசனை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web