100பேருக்கு திடீர் வாந்தி, மயக்கம்!! தொழிற்சாலையில் இரவு உணவு சாப்பிட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி!!

 
வா

காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரத்தை அடுத்த சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், ராஜகுளம் பகுதியில் இண்டோ டெக் என்ற தனியார் டிரான்ஸ்பார்மர் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 600 தொழிலாளர்கள் மூன்று சிப்ட்களில் பணிபுரிந்து வரும் நிலையில் இரவு நேர சிப்ட்டில் சுமார் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்துள்ளனர்.

காஞ்சிபுரம்

பணியில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் தொழிற்சாலையினுள் உள்ள உணவகத்தில் இரவு நேர உணவை சாப்பிட்டனர். அப்போது தொழிலாளர்களுக்கு வழங்கிய ரசத்தில் பல்லி ஒன்று விழுந்து உள்ளது தெரிய வந்தது. இது குறித்து அறிந்த தொழிலாளர்கள் பதற்றம் அடைந்த நிலையில் சுமார் 20 பேருக்கு திடீரென வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து உடனடியாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் தொழிற்சாலை பேருந்தில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அனைத்து தொழிலாளர்களும் பதற்றம் அடைந்த நிலையில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்களையும் மருத்துவமனைக்கு அழைத்து வந்து அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

 

மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து காஞ்சிபுரம் தாசில்தார் பிரகாஷ், காவல் துணை கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர், தாலுகா காவல் ஆய்வாளர் பிரேம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். பிறகு மருத்துவமனைக்குச் சென்று அங்கே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் இருக்கும்தொழிலாளர்களிடம் இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டனர். தனியார் நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி விழுந்து இறந்து கிடந்தது சம்பவம் தொழிலாளர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web