1000 மரங்கள் நட்டு அசத்திய மாமன்ற உறுப்பினர்!!

 
மரம்

திருச்சி மாநகராட்சியின் சார்பாக ஐந்தாவது வார்டு மாமன்ற உறுப்பினரும் திருச்சி மாநகர் மாவட்ட மதிமுக துணைச்செயலாளருமான அப்பிஸ் சு. முத்துக்குமார் அவர்கள் திருவானைக்காவல் சென்னை டிரங்க் ரோடு பகுதியில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வினை காலை 8 மணி அளவில் தொடங்கி வைத்தார்.

மரம்

இந்நிகழ்வில் திருவரங்கம் பகுதி தி.மு.க செயலாளர் திரு ராம்குமார், மாநகராட்சி உதவி ஆணையர் திரு . வைத்தியநாதன் உள்ளிட்ட மாநகர அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூடுதல் தகவல் காலையில் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றபின் மரக்கன்றுகளை நடத்தொடங்கியிருக்கிறார். அதுசரி திடீரென மரக்கன்றுகளை நாடும் ஆவல் என விசாரித்தால் அவருக்கு இன்றைக்கு பிறந்தநாளாம் மக்கள் சேவையில் மரக்கன்றுகளை நடும் மாமன்ற உறுப்பினரை நாமும் வாழ்த்தலாமே !.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web