ஜாலியா ஊர் சுத்த ஒரு நாளுக்கு ரூ10000?! தன்னை தானே வாடகைக்கு விட்டுக் கொண்ட இளைஞர்!!

 
ஷோஜி

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வசித்து வருபவர்  ஷோஜி மோரிமோட்டோ . இவருக்கு வயது 38. இவர் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்த பிறகு  பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தார். ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள், குறுக்கீடுகள், கசப்புணர்வுகள் காரணமாக 2018ல் அவர் தனியார் நிறுவனங்களில் இருந்து தம்மை விடுவித்து கொண்டார்.

அதே நேரத்தில் முதலீடு இல்லாமல் புதிய தொழிலை தொடங்கினார்.இது குறித்து சமூக வலைதளங்களில். 'கடைக்கு செல்வதற்கு ஆள் தேவை, விளையாடுவதற்கு ஆள் தேவை, எளிதான வேலைகளுக்கு ஆள் தேவை எனில் என்னை வாடகைக்கு எடுத்து கொள்ளலாம். ஆனால் கடினமான வேலைகளை செய்ய மாட்டேன்' என பதிவு ஒன்றை வெளியிட்டார். 
இதைப் பார்த்த பொதுமக்களில் பலர், ஷோஜி மோரிமோட்டாவை வாடகைக்கு முன்பதிவு செய்யத் தொடங்கினர். இதற்கு சம்பளமாக  முதலில் குறைவான தொகையை வசூலித்த ஷோஜி தற்போது ஒரு நாளைக்கு ரூ.7,000 முதல் ரூ.10,000 வரை கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளார். 


இதுகுறித்து ஷோஜி விடுத்த செய்திக்குறிப்பில்  ஜப்பானில்  கொரோனா காலத்தில் மட்டும் தனிமையினால் சுமார் 3,000க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்தனர். அவர்களின் தனிமையை போக்கவும், அவர்களை  புத்துணர்ச்சி அடையச் செய்யவும் என்னை நானே வாடகைக்கு விடத் தொடங்கினேன். இப்போது டோக்கியோ முழுவதும் என்னை 'மிஸ்டர் வாடகை' என்றே மக்கள் அழைக்கத் தொடங்கியுள்ளனர். 


தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்த போது முதலாளிகள், அதிகாரிகளின் அடக்குமுறைகளில் சிக்கித் தவித்து வந்தேன். இப்போது என்னை கேள்வி கேட்பதற்கு யாரும் கிடையாது. இதுவரை பல ஆயிரம் பேர் என்னை வாடகைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சில வேலைகளை செய்ய மாட்டேன். அதன்படி வீட்டை சுத்தம் செய்ய வேண்டும், பொருட்களை தூக்க வேண்டும்என அழைத்தாலோ, பாலியல் ரீதியாக அழைத்தால் அவர்களை நிராகரித்து விடுவேன். வாடிக்கையாளர்களோடு பொழுதுபோக்க மட்டுமே செல்கின்றேன். அவர்களின் மனக்குறைகளை என்னிடம் கூறுவார்கள். அவர்களை ஆசுவாசப்படுத்தி  ஆறுதல் கிடைக்க செய்வேன் என தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web