தினமும் 1,00,000 பாட்டில்கள்... 'ஆவின் குடிநீர்’ திட்டத்தை அறிவித்தது ஆவின் நிர்வாகம்!

 
ஆவின்

தினமும் 1 லட்சம் குடிநீர் பாட்டில்களை விற்பனைச் செய்ய திட்டமிட்டுள்ளது ஆவின் நிர்வாகம். யெஸ்... பால் மற்றும் பால் பொருட்களைத் தொடர்ந்து குடிநீர் விற்பனையையும் ஆவின் நிறுவனம் தொடங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக குடிநீர் பாட்டில்களை விற்பனைச் செய்வதற்கு ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டுள்ளனர்.

ஆவின் குடிநீர்

நாளொன்றுக்கு ஒரு லட்சம் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் அனைத்து விற்பனை நிலையங்கள் மூலமாக குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்ய ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டுள்ளனர். 

ஆவின்

அம்மா குடி நீர் ஏழைகள், பயணிகளுக்கு பெரும் தீர்வாக இருந்து வந்த நிலையில், ஆவின் குடிநீர் அதற்கு மாற்றாக இருக்குமா? என்கிற எதிர்பார்ப்பும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. 1 லிட்டர் மற்றும் 500 மில்லி பாட்டில்கள் மூலமாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பாட்டில்கள் விற்பனை செய்ய ஆவின் திட்டமிடப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web