இன்றே கடைசி... 10391 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்க!!
இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பழங்குடியின மாணவர்களுக்கான இஎம்ஆர்எஸ் பள்ளிகள் தொடங்கி நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகள் மூலம் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பழங்குடியின குழந்தைகளுக்கு அவர்களின் குடியிருப்பு பகுதிகளிலேயே இலவசக் கல்வியை வழங்கி வருகின்றன. இந்திய அரசின் பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தால் இப்பள்ளிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது
இந்தியா முழுவதும் இப்பள்ளிகளில் 10, 391 காலிப் பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்புவதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முதல்வர், கணக்காளர் உட்பட பல பணிகளுக்கு பட்டப்படிப்புடன் பி.எட் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாதச்சம்பளமாக ரூ18,000 முதல் ரூ2,09,200 வரையில் அளிக்கப்படும்.இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தகுதியும் ஆர்வமும் உடையவர்கள் இஎம்ஆர்எஸ் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!