10ம் வகுப்பு மாணவிக்கு ஆண்குழந்தை!! அதிர்ச்சி பிண்ணனி!!
தமிழகம் முழுவதும் சமீபகாலமாக பள்ளிகளில் தொடர் அவலங்கள் ஏற்பட்டு வருகின்றன. மாணவர்களிடையே மன அழுத்தம் காரணமாக பாலியல் குற்றங்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதனால் இளைய சமுதாயம் பெரும் சீரழிவை சந்தித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் பெரும் பிரயத்தனம் செய்து வருகின்றனர். இருந்த போதிலும் தவறுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதனால் வருங்காலம் என்னாகுமோ என்ற அச்சம் அதிகரித்து வருகிறது.
திருவொற்றியூரில் உள்ள ராமகிருஷ்ணா நகர், காந்தி தெருவில் 15 வயது சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் வண்ணாரப்பேட்டை எம்.சி. ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் நிலையில் அவருக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.இதனால் சிறுமியின் பெற்றோர் உடனடியாக ராயபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்துவிட்டு மாணவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார் .
இவருக்கு எந்தநேரத்திலும் குழந்தை பிறக்கலாம் என்றும் கூறினர்.இதை கேட்ட பெற்றோர் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மாணவிக்கு பிரவச வலி ஏற்பட்டு சிறிது நேரத்தில் மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்து விட்டது. இது குறித்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்திய போது, கடந்த 10 மாதங்களுக்கு முன்பு முகேஷ் என்ற இளைஞர் மாணவியின் வீட்டுக்கு வந்தது தெரிய வந்தது. அவர் மாணவிக்கு சித்தியின் மகன் என்பதும் அவருடன் முறைதவறி பழகியதால் கர்ப்பமடைந்துள்ளார்.
தான் கர்ப்பமானதை மறைத்து பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இருப்பினும் ஆசிரியர்களும் பெற்றோர்களுக்கும் எந்தவித சந்தேகமும் வரவில்லை. இதைத்தொடர்ந்து மாணவியின் சித்தி மகனான முகேஷ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள முகேசை போலீசார் தேடி வருகின்றனர்.