அதிர்ச்சி... 10ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெமத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 10ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் திருவனந்தபுரம் நெமம் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் நெமம் பகுதியில் வசித்து வந்தவர் அனந்தகிருஷ்ணன் (15). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வந்த நிலையில் வீட்டில் யாருமில்லாத போது தூக்கில் தொங்கியதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த நெமம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவன் அனந்த கிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

மாணவர் தற்கொலைக்கு முன் கடிதம் எதுவும் எழுதவில்லை என்றும், தற்கொலைக்கான காரணம் குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை என்றும் தொடர்ந்து குடும்பத்தினரிடம் விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
