தேர்வு அறையில் 10ஆம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம்.. ஆசிரியர் அதிரடி கைது !

 
மாணவி

தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொது தேர்வு தொடங்கியது. மாநிலம் முழுவதும் மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வை உற்சாகமாக எழுதி வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 116 மையங்களில் நடக்கிறது. இதில் தக்கலை அருகே அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஒன்றில், அருமனை அருகே உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வேலவன் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்தார். 

மாணவி

இவர் பணியில் இருந்த தேர்வு அறையில், ஏராளமான மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். அந்த வகையில் வேர்கிளம்பி பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் தேர்வு எழுதினார். அந்த மாணவியின் அருகில் சென்று ஆசிரியர் வேலவன், உரசுவது போல் நின்றதுடன் தொட்டு பேசி தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. 

இதுபோன்று அதே தேர்வு அறையில் இருந்த வேறு சில மாணவிகளிடமும் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட மாணவி இது குறித்து வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டனர். அதேபோல் கல்வித்துறை அதிகாரிகளிடமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்தனர். 

மாணவி

பின்னர் இது குறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து ஆசிரியர் வேலவனை கைது செய்தனர். தேர்வு அறையில் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

From around the web