பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை வெட்டிய பத்தாம் வகுப்பு மாணவன்.. பிண்ணனியில் அதிர்ச்சி தகவல்..!

 
பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு
செங்கல்பட்டில் சக மாணவனை மாணவன் வெட்டி வெட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த காவி தண்டலம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மூத்த மகன் சாலவாக்கம் அடுத்த ஒரக்காடு பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் தினமும் காவி தண்டலம் பகுதியில் இருந்து பள்ளிக்கு தனது சைக்கிளில் வந்து செல்வது வழக்கம்.

பள்ளி மாணவர்களுக்கிடையே மோதல்; மாணவனுக்கு அரிவாள் வெட்டு, ஒருவர் பலி…! |  TheNEWSLite

இந்த நிலையில் நேற்று காலாண்டு தேர்வின் இறுதித் தேர்வு எழுதி, முடித்துவிட்டு பின்னர் மாலை 4-மணிக்கு வீட்டிற்கு வரும் போது பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள், மாணவனை முகம் மற்றும் தலையில் வெட்டி உள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த மாணவனை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவத்தின் பொழுது அருகில் இருந்த மற்றொரு மாணவனுக்கும் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.

 மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சாலவாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் வெட்டப்பட்ட பள்ளி மாணவனுக்கும், பத்தாம் வகுப்பு படித்து வரும்  மற்றொரு மாணவனுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாகவும், இதனால் பத்தாம் வகுப்பு மாணவன் தனது அண்ணனிடம் இவனை அடிக்குமாறும் கூறியுள்ளான். அதன்படி அண்ணன் 12ஆம் வகுப்பு மாணவனை வெட்டியுள்ளான் என தெரிய வந்துள்ளது. 
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சாலவாக்கம் காவல்துறையினர் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு என்னப் பிரச்சினை என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.