மாலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. 11 பேர் பரிதாபமாக பலியான சோகம்..!!
வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் கராச்சியில் உள்ள ரஷித் மின்வரஸ் சாலையில் பல அடுக்குமாடிகளை கொண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த நிலையில் வணிக வளாகத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் வணிக வளாகத்தில் இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். இதுக்குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தியணைப்பு, மீட்புக்குழுவினர் விரைந்து வந்தனர்.
பின்னர் வணிக வளாகத்தில் பற்றி எரிந்து வரும் தியை அணைக்க முயற்சித்தனர். மேலும், வணிக வளாகத்திற்குள் சிக்கிய 50 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். ஆனால், இந்த தீ விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். வணிக வளாகத்தில் மேலும் பலர் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீ தொடர்ந்து வணிக வளாகத்தின் பிற பகுதிகளுக்கும் பரவுவதால் அதை கட்டுப்படுத்த கூடுதலாக தீயணைப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை சரியான தகவல் கிடைக்கவில்லை என அந்நகர காவல்துறை தெரிவித்துள்ளது.