இலங்கைக்கு கடத்த முயன்ற 1200 கிலோ பீடி இலைகள் பறிமுதல்!
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 1200 கிலோ பீடி இலைகளை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 2பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகி்னறனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தெற்கு கல்மேட்டிலிருந்து கடற்கரைக்குச் செல்லும் உப்பளப் பாதையில் க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர் தலைமை காவலர் இருதயராஜ குமார் இசக்கி முத்து முதல் நிலை காவல் பழனி பாலமுருகன் ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே வந்த அசோக் லேலண்ட் தோஸ்த் லோடு வேனை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட சுமார் 30 கிலோ வீதம் 40 மூடைகளில் 1200 கிலோ பீடி இலைகள் இருந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து லோடு வேனின் ஓட்டுனர் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேட்டமலை பகுதியைச் சேர்ந்த காளி ராஜன் மற்றும் உடன் வந்த பந்தல்குடியைச் சேர்ந்த அஜித் ஆகிய 2பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
