மே 6 ம் தேதி 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!

 
தேர்வு தாள்கள் திருத்தும் பணி

 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில்12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 1ம் தேதி தொடங்கப்பட்டு 22ம் தேதி நிறைவடைந்தது. மொத்தமாக 1.80 லட்சம் மாணவ - மாணவிகள் எழுதி உள்ளனர். இந்த தேர்வுக்கான விடைத்தாளை திருத்தும் பணிக்காக தமிழகம்  முழுவதும் 83 பள்ளிக்கூடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  
இந்த மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியுள்ளது.

விடைத்தாள்கள் திருத்தும் பணி

இப்பணியில் 46000 முதுநிலை ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விடைத்தாள்களை திருத்தி வருகின்றனர்.  சென்னையை பொறுத்தவரை சென்னை  மற்றும் புறநகர் பகுதிகளில் 5 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுகிறது.இப்பணிகள் ஏப்ரல்13ம் தேதி முடிவடைகிறது. அதன் பின்னர், மாணவ - மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை இணையதளத்தில் பதிவிடும் பணி நடைபெற உள்ளது.

விடைத்தாள்கள் திருத்தும் பணி

இதைத் தொடர்ந்து ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்தபடி  ப்ளஸ்-2 தேர்வு முடிவு மே மாதம் 6ம்  தேதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
ப்ளஸ்-1 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரையிலும், தற்போது நடைபெற்று வரும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 12-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web