15 ராஜநாகங்கள், 2 ஆமைகள், 1 குரங்கு!! விமானநிலையத்தில் பரபரப்பு!!

 
நாகம்

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த ‘தாய் ஏர்வேஸ்’ விமானத்தில் கடத்தல் பொருள்கள் இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமானத்தின் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்தனர்.

விமானம் விமான நிலையம்

அப்போது தாய்லாந்து சுற்றுலா சென்று சென்னை திரும்பிய இளைஞர் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. அதன் அடிப்படையில், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இளைஞர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர்.

அப்போது காட்டு விலங்குகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், உடனே வன விலங்கு அதிகாரிகளை வரவழைத்து ஆய்வு செய்தனர். அப்போது 1குட்டி குரங்கு, 15 ராஜ நாகம் குட்டிகள், 5 பந்து மலை பாம்பு குட்டிகள், 2 ஆமைகள் இருந்துள்ளன.

சுங்கத்துறை

இவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் மருத்துவ பரிசோதனை செய்யாமல் வன விலங்குகளை கடத்தி வந்ததால் அவற்றை திரும்ப தாய்லாந்து செல்லும் விமானத்தில் அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து அந்த இளைஞரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web