தமிழக மீனவர்கள் 15 பேர் சிறைபிடிப்பு... இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!

 
அதிர்ச்சி!! தமிழர்களை  சிறை பிடித்த இலங்கை அரசு!! கொந்தளிக்கும் மீனவர்கள்!!

மத்தியிலும், தமிழகத்திலும் யார் ஆட்சிக்கு வந்தாலும், தமிழக மீனவர்களின் பிரச்சனைகள் தீராது போல. இலங்கை கடற்படையில் தொடர் அட்டூழியமாக மீண்டும் தமிழகத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

23 மீனவர்கள் சிங்களப் படையால் கைது: மீனவர் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு தேவை! – டாக்டர் ராமதாஸ்

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும்  காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் போதெல்லாம் இலங்கை கடற்படையினர் மற்றும் கடல் கொள்ளையர்களால் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.  இந்நிலையில், தமிழக மீனவர்கள் 15 பேரை படகுடன் இலங்கை கடற்படையினர்  கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

மீனவர்கள் கைது

கடந்த சில தினமும் தினங்களுக்கு முன்பு  22 மீனவர்களை சிறைபிடித்துச் சென்ற நிலையில், தற்போது நாகை மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றுள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web