பகீர்!! 16 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்!!
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பள்ளிக்கூடங்களும் இதற்கு விதிவிலக்கல்ல என்பது தான் வேதனையான விஷயம். பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டிய ஆசிரியர்களே சிலர் இந்த கேவலமான செயலில் ஈடுபடுவது பெற்றோர்கள், மாணவிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் அருகே கருளாயி பகுதியில் அரசு உதவி பெறும் ஒரு தனியார் நடுநிலைப்பள்ளி உள்ளது. அதே பகுதியில் வசித்து வரும் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் மாணவ, மாணவிகள், தங்களது குறைகளை தெரிவிப்பதற்காக சமீபத்தில் ஒரு புகார் பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. இந்த புகார் பெட்டியை வாரத்திற்கு ஒரு முறை ஆசிரியர்கள் திறந்து மாணவர்களின் குறைகளுக்கு தீர்வு காண்பார்கள். வழக்கம்போல இந்த புகார் பெட்டியை திறந்து அதில் இருந்த கடிதங்களை படித்த ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பள்ளியில் பணிபுரியும் வல்லப்புழா பகுதியில் வசித்து வரும் முகம்மது நவ்ஷார் என்கிற ஆசிரியர் தங்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 16 மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த 16 பேரும் ஒரே ஆசிரியரின் பெயரை குறிப்பிட்டிருந்தது மேலும், அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இது குறித்து உடனடியாக மலப்புரம் காவல்துறைக்கு பள்ளி ஆசிரியர்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக பள்ளிக்கு விரைந்து சென்று புகார் எழுதிய ஒரு மாணவியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் ஜூலை 20ம் தேதி ஆசிரியர் முகம்மது நவ்ஷார், தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறினார். அனைத்து மாணவிகளும் இதையே கூறவே இதன் அடிப்படையில் ஆசிரியர் நவ்ஷார் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விஷயம் அறிந்து ஆசிரியர் தலைமறைவாகியுள்ளார். அவரை தேடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?