லாவோசில் சிக்கி பரிதவித்த 17 இந்தியர்கள்.. மத்திய அரசின் துரித நடவடிக்கையால் பத்திரமாக மீட்பு!
தென்கிழக்கு ஆசிய நாடான லாவோஸில் இந்தியத் தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாகவும், அங்கு அவர்கள் பாதுகாப்பற்ற மற்றும் சட்டவிரோதமான வேலைகளில் ஈடுபடுவதாகவும் செய்திகள் வெளியாகின. இதையடுத்து அவர்களை பத்திரமாக சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. லாவோஸில் உள்ள இந்திய தூதரகம் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
Modi ki Guarantee works for all at home and abroad.
— Dr. S. Jaishankar (Modi Ka Parivar) (@DrSJaishankar) April 6, 2024
17 Indian workers, lured into unsafe and illegal work in Laos, are on their way back home.
Well done, @IndianEmbLaos. Thank Lao authorities for their support for the safe repatriation. pic.twitter.com/KgIM56YJkE
இந்நிலையில், லாவோஸில் சிக்கித் தவித்த 17 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மோடியின் உத்தரவாதம் உள்நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கும் தான்.

லாவோஸில் பாதுகாப்பற்ற மற்றும் சட்டவிரோத வேலைகளில் சிக்கிய 17 இந்திய தொழிலாளர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். லாவோஸில் உள்ள இந்தியத் தூதரகத்தின் வெற்றிகரமான முயற்சிகளுக்குப் பாராட்டுகள். இந்தியத் தொழிலாளர்கள் பாதுகாப்பாகத் திரும்புவதற்கு ஆதரவளித்த லாவோ அதிகாரிகளுக்கு நன்றி என பதிவிட்டுருந்தார்."
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!
