இலங்கை சிறையிலிருந்து 19 தமிழக மீனவர்கள் விடுதலை... 19 பேரும் இன்று சென்னை வந்தடைந்தனர்!

இதனையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் .சமீபத்தில், 19 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது, அவர்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர் . இந்திய தூதரக அதிகாரிகள், தமிழக மீனவர்களை தங்களுடைய பாதுகாப்பில் வைத்து, அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து, 19 மீனவர்களையும் விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர். மீனவர்களிடம் பாஸ்போர்ட் இல்லாததால், தூதரக அதிகாரிகள் அனைவருக்கும் அவசர பயணச் சான்றிதழ் வழங்கினர். இலங்கையில் இருந்து 19 மீனவர்களுக்கும் சென்னைக்கு விமான டிக்கெட்டுகளை இந்திய தூதரகம் ஏற்பாடு செய்தது. சென்னை விமான நிலையம் வந்தடைந்த மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 20 ஆண்டுகளில் 6184 இந்திய மீனவர்கள் இலங்கையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் , 1175 இந்திய மீன்பிடி படகுகள் இலங்கையால் கைப்பற்றப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளன அல்லது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவிக்கையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
கடந்த ஐந்தாண்டுகளில் கச்சத்தீவு, மீனவர் பிரச்னை ஆகியவை நாடாளுமன்றத்தில் பல்வேறு தரப்பினரால் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. அது நாடாளுமன்ற கேள்விகள், விவாதங்கள் மற்றும் ஆலோசனைக் குழுவில் வந்துள்ளது. இந்த விவகாரத்தின் முக்கியத்துவத்தை விவரித்த ஜெய்சங்கர், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வருக்கு 21 முறை பதில் அளித்துள்ளதாகவும், நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறினார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!