கனரக வாகனம் மோதியதில் 2 குழந்தைகள் பலி!! தந்தை கவலைக்கிடம்!!

 
வர்ஷா

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராங்குப்பத்தில் வசித்து வருபவர் தண்டபாணி. திருமணமான இவர் தனது மனைவி மற்றும் ஜெய ஸ்ரீ (14) மற்றும் வர்ஷா (12) ஆகிய 2 பெண் குழந்தைகள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். இதில் ஜெயஸ்ரீ ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பும், வர்ஷா அதே பள்ளியில் 8ம் வகுப்பும் படித்து வந்தனர்.

விபத்து

இந்நிலையில் செப்டம்பர் 15ம் தேதி இன்று  காலை தந்தை தண்டபாணி, தனது 2 பெண் குழந்தைகளையும் தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார். பள்ளிக்கு செல்லும் ஆர்வத்தில் 2 சகோதரிகள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டே வந்தனர். அப்போது ஆம்பூர் ஓ.ஏ.ஆர் திரையரங்கம் அருகில் உள்ள சிக்னலில் இவர்கள் சென்ற பைக் நின்றது.

அப்போது கர்நாடகாவிலிருந்து வேலூர் நோக்கி லாரி ஒன்று அசுர வேகத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று தண்டபாணியின் இரு சக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஜெயஸ்ரீ மற்றும் வர்ஷா ஆகிய 2 சகோதரிகளும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸ்
இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த  தண்டபாணி படுகாயங்களுடன் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற லாரி ஓட்டுனரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.பட்டப்பகலில் சிக்னலில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது அசுர வேகத்தில் வந்த லாரி மோதிய விபத்தில் 2 பெண் குழந்தைகள் பலியான காட்சி அங்கிருந்தவர்களை கதிகலங்க வைத்துவிட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web