பள்ளிக்கு சென்ற 2 குழந்தைகள் மாயம்!! கடத்தலா?! விருதுநகரில் பரபரப்பு!!!
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே வக்கனாகுண்டு பகுதியில் வசித்து வருபவர் ரத்தினம். இவரது மனைவி ஜான்சிராணி. இந்த தம்பதிக்கு முகேஷ் என்ற மகனும், பிருந்தா என்ற மகளும் உள்ளனர். கணவர் ரத்தினம் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டதால் ஜான்சிராணி வேறொருவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இதைத்தொடர்ந்து குழந்தைகள் 2 பேரும் ஜான்சிராணியுடன் சேர்ந்து வாழ மறுத்து வக்கனாகுண்டில் உள்ள தனது தாத்தா சுப்பையா பராமரிப்பில் வளர்ந்து வருகின்றனர்.
குழந்தைகள் 2 பேரும் அங்கிருந்தபடியே பள்ளிக்கு சென்று வந்துள்ளனர்.இந்நிலையில் பள்ளிக்கு சென்ற குழந்தைகள் 2 பேரையும் மர்ம நபர்கள் சிலர் கடத்திச் சென்றதாக தாத்தா சுப்பையா காரியாபட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 2 குழந்தைகளையும் கடத்திச் சென்ற மர்ம நபர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் தாய் ரத்தினத்திடமும், அவரது 2வது கணவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் காணாமல் போனதாக சொல்லப்படும் பகுதியில் ஏதேனும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தாத்தா பராமரிப்பில் வளர்ந்து வந்த 2 குழந்தைகள் திடீரென்று பள்ளி செல்லும் வழியில் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?