மின்வேலியில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு!! தந்தையின் பொறியில் மகன் பலியான பரிதாபம்!!

 
மின்வேலி

 

கிருஷ்ணகிரி அருகே உள்ள சுபேதார் மேடு பகுதியைச் சேர்ந்தவர் தசரதன் (26). இவரது தாமோதரன் (55). இருவரும் விவசாயிகள்.  தசரதனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். அதே ஊரைச் சேர்ந்த சத்யா என்ற இளம்பெண்ணுடன் தசரதனுக்கு பழக்கம் ஏற்பட்டு பின்னர் தகாத உறவாக மாறி இருக்கிறது. சத்யா கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு ஒன்றரை வயது குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.

மின்சாரம்

ஜூலை29ம் தேதி சத்யா தனது ஒன்றரை வயது குழந்தையுடன் சுபேதார் மேடு பகுதிக்கு வந்து தசரதனை ரகசியமாக சந்தித்துள்ளார். இதைத்தொடர்ந்து சத்யா மற்றும் அவரது குழந்தையை தசரதன் அதே பகுதியில் உள்ள ஒரு இரும்பு கொட்டகைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு தனிமையில் இருந்த தசரதனும், சத்யாவும் பிணமாக அடுத்த நாள் காலை கண்டெடுக்கப்பட்டனர். குழந்தை அழுகுரல் கேட்டு மாடுகளை மேய்ச்சலுக்காக வந்த சிலர் அங்கு சென்று பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக இது குறித்து மகாராஜா கடை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி டிஎஸ்பி தமிழரசி மற்றும் மகாராஜா கடை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் சடலங்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி

தசரதன், சத்யா உள்ளிட்டோர் இறந்து கிடந்த இரும்பு கொட்டகை அதே பகுதியைச் சேர்ந்த தாமோதரன் (தசதரனின் தந்தை) என்பவருக்கு சொந்தமானது. இந்த பகுதியில் மது அருந்துதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் நடந்துவந்ததால் அதனை சுற்றி மின்வேலி போடப்பட்டுள்ளது. இதில் சிக்கி தசரதனும், சத்யாவும் உயிரிழந்துள்ளனர் என்று போலீசார் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து மின்வேலி அமைத்த தசதரனின் தந்தை தாமோதரனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.தவறான பழக்கத்தில் இருந்து வந்த 2 பேர் மின் வேலி அமைக்கப்பட்ட இரும்பு கொட்டகையில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web