குப்பைத் தொட்டியில் 2 குறைமாத சிசுக்கள்!! நாய்கள் கடித்து குதறிய கொடூரம்!!

 
குப்பை தொட்டியில் சிசு

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி, புனித பிலோமினாள் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்கு அருகே மாநகராட்சி சார்பில்   குப்பைத் தொட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது.  வழக்கம் போல் தூய்மை பணியாளர்கள் இன்று காலையில் குப்பைத் தொட்டியில் இருந்து குப்பையை அள்ளிக் கொண்டு இருந்தனர். அப்போது   குப்பை தொட்டியில் குறைமாத சிசுக்கள் 2 உயிரிழந்த நிலையில்   கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

குப்பை தொட்டியில் சிசு


 இச்சம்பவம் குறித்து தகவல் அளிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்.   2 பெண் சிசு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குப்பைத் தொட்டி அருகே கிடந்ததால் சிசுக்களை நாய்கள் கடித்து குதறிய கொடூரமும் நடந்துளது. இதில்  ஒரு குழந்தையின் தலையை காணவில்லை.

குப்பை தொட்டியில் சிசு

 இச்சம்பவம் குறித்து   வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த குறைமாத  சிசுக்களை யார் குப்பைத் தொட்டியில் வீசி சென்றனர்? இவை 2ம் ஒரே தாயின் பிள்ளைகளா?   கள்ளத்தொடர்பால் பிறந்ததா? வீசி சென்றது யார்? என பல   கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்யும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web