கிணற்றில் இறந்த நிலையில் பள்ளி மாணவர்கள் 2 பேர் மீட்பு!! போலீசார் விசாரணை!!

 
கோபி, நகுல்

கும்மிடிப்பூண்டி அருகே கிணற்றில் இறந்த நிலையில்   மாணவர்கள் 2 பேர் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி  அடுத்த  பூலாம்பேடு  ஊராட்சிக்குட்பட்ட  குருவராஜா கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயதுடைய கோபி சந்த் என்ற மாணவனும், புது ராஜா கண்டிகை  அரசு  தொடக்க பள்ளியில் 5 வகுப்பு படிக்கும் 12 வயதுடைய நகுல் என்ற  மாணவனும்  காணாமல் போயுள்ளனர். பெற்றோர்கள் இருவரையும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

தரை கிணறு

இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள திடீர்  நகரில்  தொல்லியல்  துறைக்காக ஒதுக்கப்பட்ட 94 ஏக்கர்   நிலத்தில்  தரை  கிணற்றில், சிறுவன் ஒருவன்  சடலமாக  கிடந்துள்ளான். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் போலி   கவரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து  சம்பவ இடத்திற்கு  விரைந்து  வந்த  கவரப்பேட்டை  போலீசார்  தேர்வாய்  தீயணைப்பு வீரர்களின்   உதவியுடன்  சிறுவனின் சடலத்தை மீட்டனர். மேலும் கிணற்றில் இருந்து மற்றொரு மாணவனின் சடலமும் மீட்கப்பட்டது.    

சிறுவன் பலி

தொடர்ந்து தரை கிணற்றிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட இரண்டு   பள்ளி மாணவர்களும் பொன்னேரி அரசு  மருத்துவமனைக்கு   பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்இதுத்தொடர்பாக   போலீசார் மேற்கொண்ட  விசாரணையில் சிறுவர்கள் இருவரும் காணாமல் போன    கோபி சந்த்,   நகுல் என்பது தெரியவந்தது.  மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த  கவரப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

From around the web