தடுப்பு சுவரில் கார் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி!

 
சாலை விபத்து

சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவரில் கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் நாட்டறம்பள்ளியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநில பெங்களூரு சஞ்சய் நகர் பகுதியில் வசித்து வருபவர் முத்துவேல். அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரில் இவரது மகன் சக்திவேல் (20) என்பவர் (வயது 20). படித்து வந்தார். கல்லூரி மாணவன் சக்திவேல் மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் ராஜ்குமார் (16) என்பவரும் நண்பர்களாக இருந்தனர். இவர் விவேகானந்தர் தெருவில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நண்பர்கள் 2 பேரும், தங்களது நண்பர் ராஜேஷ் என்பவரின் பிள்ளைகளின் காதணி விழாவுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர். ராஜேஷ் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். 

விபத்து
விழாவில் கலந்து கொள்ள கர்நாடக மாநில பெங்களூருவில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி 2 பேரும் காரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கிருஷ்ணகிரி வேலூர் நோக்கி செல்லும் மார்க்கத்தில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே ஆத்தூர் குப்பம் என்ற பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் சக்திவேல் நிலை தடுமாறி கார் தடுப்பு சுவரில் பலமாக மோதியது. இதில் எதிர் திசை சாலையில் அருகேயுள்ள பள்ளத்தில் கார் கவிழ்ந்ததது. 

இந்த கோர விபத்தில் 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொது மக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் வரும் வழியிலே இறந்துவிட்டதாக தெரிவித்தார். 

தாய் மற்றும் 2 குழந்தைகள் தற்கொலை
பின்னர் இது குறுத்து நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார் 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவனும், பள்ளி மாணவனும் சாலை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web