2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!! ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு!!

 
சுட்டுக் கொலை


ஜம்மு காஷ்மீரில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் 2 தீவிரவாதிகள் இந்திய பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் ஜெய்ஷ்இமுகமது தீவிரவாதிகள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.ஜம்முகாஷ்மீர் பகுதியில் அடிக்கடி தீவிரவாதிகள் ஊடுருவலில் அடிக்கடி ஈடுபட்டு வருகின்றனர். போதைப் பொருட்கள் மற்றும் வெடிப்பொருட்களையும் இந்திய எல்லைக்குள் கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்திய பாதுகாப்பு படை வீரர்களின் தொடர் மற்றும் அதிரடி கண்காணிப்பு மூலம் நாசவேலைகள் முறியடிக்கப்பட்டு வருகிறது.

ராணுவம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூர் பகுதியில் நேற்று பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் நேற்று கடுமையான துப்பாக்கிசூடு நடைபெற்றது. இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்ப்பட்டனர். இறுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.சோபூர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போது இந்த துப்பாக்கிசூடு நடைபெற்றது.

ராணுவம்

இது குறித்து சோபூர் போலீசார் கூறும்போது, ‘‘துப்பாக்கிச்சூடு நேற்றிரவு நடந்தது. அப்போது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் ஒருவருக்கு எதிர்பாராதவிதமாக காயம் ஏற்பட்டது. 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதன் மூலம் அப்பகுதியில் நிலவி வந்த அச்சுறுத்தல் குறைந்துள்ளது. ஜெய்ஷ்-இ-முகமத் இயக்கத்தை சேர்ந்த அவர்கள் முகமது ரபி மற்றும் கைசர் அஷ்ரப் என்று தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. அதிபயங்கர குற்ற பின்னணிகளைக் கொண்ட இருவர் மீதும் வழக்குகள் பல நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது. சோபூர் பகுதி மக்கள் மீது 2 பேரும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர் என்பது விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களிடையே சலசலப்பும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web