மின்னல் தாக்கி 2 பெண்கள் பலி.! வயலில் நடவு பணிக்காக சென்ற போது நேர்ந்த சோகம்!!

 
மின்னல் பலி

வயலில் நடவு பணிக்காக சென்ற இரு பெண்கள் மின்னல் தாக்கி   உயிரிழந்த சோக சம்பவம் கள்ளக்குறிச்சி நிகழ்ந்துள்ளது.  கள்ளக்குறிச்சி மாவட்டம் பெத்தானூர் கிராமத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பெண் கூலி தொழிலாளர்கள் நேற்று மதியம் கருங்குழி கிராமத்தில் நெற்பயிர் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் அப்பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

மின்னல்

அப்போது நடவு பணியில் ஈடுபட்டிருந்த பெத்தானூரை சேர்ந்த செந்தில் என்பவரின் மனைவி உமா ,ராமர் என்பவரது மனைவி பெரியம்மாள்  ஆகியோர் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர்கள் 2 பேரும் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மின்னல் தாக்கி பலியான பெரியம்மாளின் கணவர் கடந்த ஆண்டு கொரோனாவால் இறந்தார். இதனால் பெற்றோரை இழந்து பெரியம்மாளின் 3 குழந்தைகளும் பரிதவித்து வருகின்றனர்.

ஒருவர் பலி

இது குறித்து தகவல் அறிந்த கீழ்குப்பம் போலீசார் உயிரிழந்த இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web