அதிகாலையில் அதிர்ச்சி... சபர்மதி எக்ஸ்பிரஸில் 20 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து!
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மற்றும் பீம்சென் ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று அதிகாலை 2:30 மணியளவில் சபர்மதி எக்ஸ்பிரஸின் 20 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக எந்தவிதமான உயிர்சேதமோ காயங்களோ ஏற்படவில்லை. ரயில் தடம் புரண்டதற்கு நாசவேலைகள் காரணமாக இருக்க வாய்ப்புள்ளதாக ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து காரணமாக 7 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதோடு, மூன்று ரயில்கள் திருப்பி விடப்பட்டன. ரயிலின் முன்பகுதி தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த பாறைகளின் மீது மோதியதால் சேதம் ஏற்பட்டதாக லோகோ பைலட் தெரிவித்தார்.
Sabarmati Express Derails in Kanpur: Accident or Conspiracy?
— Our Vadodara (@ourvadodara) August 17, 2024
The Sabarmati Express derailed in Kanpur, with 25 coaches off the tracks. The train, traveling from Varanasi to Ahmedabad, reported no casualties, but some passengers were injured. The driver mentioned a collision with… pic.twitter.com/xhfzgfCeDV
இந்த விபத்து குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கருத்து தெரிவிக்கையில், ரயிலில் கூர்மையான பொருளால் மோதியிருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. "சபர்மதி எக்ஸ்பிரஸின் (வாரணாசியிலிருந்து அகமதாபாத்) இன்ஜின் இன்று அதிகாலை 2:35 மணிக்கு கான்பூர் அருகே தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு பொருளைத் தாக்கி தடம் புரண்டது. நாசவேலைக்கான அறிகுறிகளை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.

உளவுத்துறை பணியகம் (ஐபி) மற்றும் உபி போலீசார் தங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர், பயணிகள் அல்லது பணியாளர்கள் யாரும் காயமடையவில்லை, பயணிகள் அஹமதாபாத் பயணத்தைத் தொடர ஏற்பாடு செய்யப்படவில்லை, ”என்று அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஷஷி காந்த் திரிபாதி கூறுகையில், பயணிகளை கான்பூருக்கு கொண்டு செல்வதற்காக கான்பூரில் இருந்து எட்டு பெட்டிகள் கொண்ட மெமு ரயில் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது. அரசு பேருந்துகளும் சம்பவ இடத்துக்கு வந்து பயணிகள் அந்தந்த இடங்களுக்குச் செல்ல உதவியது. இச்சம்பவத்தின் எதிரொலியாக, தகவல் தேடுபவர்களுக்கு ரயில்வே அவசர உதவி எண்களை வழங்கியுள்ளது.
