மாயமான சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ... ரூ20 லட்சம் நிவாரணத் தொகை அறிவிப்பு!

 
ஆர்த்தி

புதுச்சேரி சோலை நகரில் வசித்து வரும் தம்பதி   நாராயணன்   மைதிலி தம்பதி .  இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், இரண்டாவது மகள் 9 வயது ஆர்த்தி. இவர்   அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். 

ஆம்புலன்ஸ்

 கடந்த சனிக்கிழமை ஆர்த்தி  வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மாயமானார்.  எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் பெற்றோர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்த  இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வந்தனர்.

 காணாமல் போன சிறுமி  3 நாட்களுக்கு பிறகு   வீட்டின் அருகே உள்ள வாய்க்காலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சிறுமியின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.   போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரங்கசாமி

புதுச்சேரியில் கொலை  செய்யப்பட்ட ஒன்பது வயது சிறுமியின் குடும்பத்திற்கு ரூ 20 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது . உயிரிழந்த சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி  இந்த  நிவாரணம் அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.  

From around the web