தமிழகத்தில் 200 பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு !

 
தமிழகத்தில்  200 பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு

ஜம்மு காஷ்மீரில்  தீவிரவாதிகளின் திடீர்  தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசு அதிரடி உத்தரவை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  அதன்படி பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, வாகா எல்லை மூடப்பட்டுள்ளது   இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணிநேரத்தில் வெளியேறவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கு இனி விசா வழங்கப்படாது  என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில்  200 பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு

அதேபோல் பாகிஸ்தான் சென்றுள்ள இந்தியர்கள், மே 1ம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் எனவும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. சார்க் விசா ஒப்பந்த‌த்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள விசா மூலம் பாகிஸ்தானியர்கள் இந்தியா வர தடை விதிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.  இந்தியா- பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லை உடனடியாக மூடப்படும் என மத்திய வெளிறவுத்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில்  200 பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு

இந்நிலையில், தமிழகத்தில் 200 பாகிஸ்தானியர்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியுரிமை அதிகாரிகள் கணக்கெடுப்பின் படி இந்த தகவல்கள் வெளியாகின.  தற்போது தொழில் மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக வந்திருப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்தியாமுழுவதிலும் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேறி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!