இலங்கை சிறையிலிருந்து விடுதலையான 21 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்!
சர்வதேச எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 21 பேர் இன்று தாயகம் திரும்பினர்.கடந்த நவம்பர் 9ம் தேதி ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற 3 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி படகுகளில் இருந்த 23 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இலங்கை கடற்பகுதிக்குள் மீண்டும் மீன்பிடித்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் 20 மீனவர்களை விடுதலை செய்தும், விசைப்படகு ஓட்டுநர்களான 3 பேர்களுக்கு தலா 6 மாத சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளிக்கப்பட்டது.
முன்னதாக கடந்த ஜூன் 22ம் தேதியன்று ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்குச் சென்ற ஒரு விசைப்படகை கைப்பற்றி, அதிலிருந்த 7 மீனவர்களின் விசைப்படகு ஓட்டுநர் காளிஸ்வரன் என்பவருக்கு மட்டும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதித்து ஊர்காவல்துறை நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

காளிஸ்வரனின் சிறை தண்டனையையும், அபராதத்தையும் ரத்து செய்யக் கோரி அவரது குடும்பத்தினர் சார்பாக யாழ்ப்பாணம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு கடந்த நவம்பர் 7ம் தேதி காளிஸ்வரன் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் விடுதலை செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்களும் கொழும்பு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு நேற்றிரவு சென்னை வந்தடைந்தனர். அங்கிருந்து மீன்வளத்துறையினர் தனி வாகனங்கள் மூலம் இன்று காலை ராமேஸ்வரம் சென்றடைந்தனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
