சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் மூலம் 2.13 லட்சம் பேர் பயணம்!

 
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள்

மே தின தொடர் விடுமுறை மற்றும் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்காகத் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. இதன்படி நேற்று முதல் இன்று அதிகாலை 3 மணி வரை வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாகச் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன. இந்த வசதியைப் பயன்படுத்தி ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்குப் பயணம் செய்துள்ளனர்.

பேருந்து நிலையம் கிளாம்பாக்கம் தீபாவளி நெரிசல் சொந்த ஊர்

புள்ளிவிவரங்களின்படி, வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன், பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்க 1,784 சிறப்பு பேருந்துகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 3,876 பேருந்துகள் இயக்கப்பட்டு, இதுவரை 2,13,180 பயணிகள் தங்கள் இலக்கைச் சென்றடைந்துள்ளனர். விடுமுறை நாட்களை முன்னிட்டுப் போக்குவரத்துத் துறை மேற்கொண்ட இந்தத் திட்டமிட்ட நடவடிக்கை பயணிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வெளியூர் தொடர்விடுமுறை  மக்கள்

இன்றும் பொதுமக்களின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளைத் தொடர்ந்து இயக்கத் தயார் நிலையில் இருப்பதாகப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. பேருந்து நிலையங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், பயணிகள் சிரமமின்றிப் பயணிக்கவும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசு எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கையால் மே தின விடுமுறையை முன்னிட்டுச் சொந்த ஊர் செல்பவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.