25கோடி பம்பர் பரிசு!! ஆட்டோ ஓட்டுனருக்கு அடித்த அதிர்ஷ்டம்!!

 
லாட்டரி

தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி விற்பனை சக்கை போடு போட்டு வருகிறது. இதனை வாங்கியே தீருவது என பலர் இதற்கு அடிமையாகியும் வருகின்றனர். அந்த வகையில் கேரளாவில் ஆட்டோ ஓட்டுனராக தொழில் செய்து வருபவர் அனூப்

கடலூரில் லாட்டரி சீட்டு விற்ற 6 பேர் கைது!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஸ்ரீவராஹம் பகுதியில் வசித்து வருபவர் அனூப். ஆட்டோ ஓட்டுனரான இவர் கடந்த 22 ஆண்டுகளாக தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்குவதை பழக்கமாக வைத்துள்ளார். அதன்படி இதுவரை அவருக்கு ரூ.100 முதல் ரூ.5,000 வரை மட்டுமே பரிசுத்தொகை கிடைத்து வந்தது.
இந்நிலையில் ஓணம் பம்பர் லாட்டரி ஒன்றை அனூப் வாங்கியிருந்தார். அதில் இவருக்கு கடந்த சனிக்கிழமை இவர் வாங்கியிருந்த லாட்டரி எண்ணுக்கு ரூ.25 கோடி பரிசாக கிடைத்துள்ளது. இதை அறிந்த அனூப் உற்சாகத்தில் வானத்திற்கும் பூமிக்கும் குதித்துள்ளார்.

இது குறித்து அனூப் கூறும்போது, ‘‘நான் வங்கியில் கடன் வாங்கியிருந்தேன். அது குறித்து பேச என்னை வங்கியில் இருந்து என்னை அழைத்து பேச இருந்த நிலையில், எனக்கு 25 கோடி ரூபாய் லாட்டரியில் பரிசாக கிடைத்துள்ளது. இதற்கு முன்பு நான் மலேசியாவில் ஓட்டல் வேலைக்குச் செல்ல திட்டமிட்டிருந்தேன். இனி நான் அங்கு செல்லப் போவது இல்லை. பரிசுப்  பணத்தை வைத்து வீடு கட்டுவேன்.

தமிழகத்தில் மீண்டும் லாட்டரி சீட்டுக்கள் விற்பனைக்கு?!

எனது கடன் முழுவதையும் திருப்பிச் செலுத்துவேன். சொந்தமாக ஓட்டல் ஒன்றையும் தொடங்குவேன்’’ என்று சந்தோஷக் களிப்பில் கூறினார். ரூ.25 கோடி பரிசுத்தொகையில் வரிப்பிடித்தம் போக ரூ.15 கோடி அனுப்புக்கு கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும் என்பார்கள் அது உண்மைதான் போல இருக்கிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web