திடீரென மேலே எழுந்த 25 அடி ஆழ உறைகிணறு!!..

 
திடீரென மேலே எழுந்த 25 அடி ஆழ உறைகிணறு!!..

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் பெய்து கொண்டிருக்கும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

திருப்பதி சுற்றுவட்டாரத்தில் கடந்த சில வாரங்களாகவே பெய்து வரும் கனமழை காரணமாக ஸ்ரீகிருஷ்ணா நகரிலுள்ள ஒரு வீட்டில் உறைகிணறு ஒன்று திடீரென சுமார் 25 அடி உயரத்துக்கு மேலெழும்பியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் வீட்டின் பெண் உரிமையாளர்.

அந்த உறைகிணறு அமைந்திருக்கும் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன் சிற்றோடை சென்றதாகவும் அதன் மீதுதான் தற்போது வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றும் கனமழை காரணமாக தற்போதுவரை உயிரோட்டத்துடன் உள்ள அந்த சிற்றோடையில் நீரோட்டம் ஏற்பட்டு, மண் தளர்ந்து வளையங்கள் மேலே வந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தை காண அப்பகுதி மக்கள் குவிந்துள்ளனர். கனமழை காரணமாக இந்த விநோதம் நடந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web