விடுதி உணவு சாப்பிட்ட 27 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்!!
திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவிகள் உட்பட 31 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. சத்திரம்பேருந்து நிலையம் அருகே தனியார் கல்லூரி விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கியிருக்கும் மாணவிகளுக்கு நேற்று இரவு உணவு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
சிறிது நேரத்தில் அந்த உணவை சாப்பிட்ட 27 மாணவிகள், 4 விடுதி கண்காணிப்பாளர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 31 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 15 பேர் சிகிச்சை முடிந்து விடுதி திரும்பியுள்ளனர்.
மீதமுள்ள 16 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உணவு பிரச்சினையால் உடல் உபாதையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?