உலகின் 2வது பெரிய பணக்காரராக இந்தியர்! அமேசானை பின்னுக்கு தள்ளிய அதானி!

 
கெளதம் அதானி

நிஜமாகவே இது பெரிய சாதனையாக தான் பார்க்கப்படுகிறது. உலகில், ஆசியாவில் இருந்து முதல் முறையாக ஒரு தொழிலதிபர், அதுவும் இந்தியர் ஒருவர் உலக பணக்காரர்களின் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்திருக்கிறார். இந்திய தொழில் அதிபர் கவுதம் அதானி, இந்த சாதனையை அமேசான் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முன்னேறியுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் முதல் இடத்தை பிடிப்பாரா என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தற்போது முதல் இடத்தில் எலென் மாஸ்க் உள்ளார். 

இந்தியாவின் முக்கிய தொழில் அதிபரான கவுதம் அதானியின் சொத்து மதிப்பு கடந்த சில காலமாகவே அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இதனால் உலக பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறார். புளூம்பெர்க் பில்லினியர்ஸ் உலக பணக்காரர்கள் வெளியிட்ட அறிக்கை இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளினார் கவுதம் அதானி…!!

அதில், உலக பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி 3ம் இடத்தில இருந்து வந்தார். அவர் 2ம் இடத்தில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசை பின்னுக்கு தள்ளியுள்ளார். இதன் மூலம் உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதானியின் சொத்து மதிப்பு சுமார் 234 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அதானி குழுமத்தில் பங்குகள் ஏற்றத்தை சந்தித்ததே என்று கூறப்படுகிறது.

கெளதம் அதானி

உலக பணக்காரர்கள் பட்டியலில எலான் மஸ்க் 273.2 பில்லியன் டாலர்கள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறார். விரைவில் கவுதம் அதானி எலான் மஸ்க்கை தாண்டி முதல் இடத்தை பிடிப்பார் என்று பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன்படி புளூம்பெர்க் பில்லியனர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பெர்னார்ட் அர்னால்ட் 154.7 பில்லியன் டாலர்களுடன் 3வது இடத்திலும், ஜெப் பெசோஸ் 146.9 பில்லியன் டாலர்களுடன் 4வது இடத்திலும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  இந்திய தொழில் அதிபர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 2ம் இடத்தை பிடித்ததை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web