மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி 3 பேர் பலி!!

 
maathammal

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே திண்டல் ஊராட்சிக்குட்பட்ட ஒடச்சகரை கிராமத்தில் வசித்து வந்தவர் மாதம்மாள் (55). இவரது மகன் பெருமாள் (33). இவருக்கு திருமணமாகி மோகனா என்கிற மனைவி உள்ளார். பெருமாளின் அத்தை சரோஜா (70). இந்த நிலையில் நேற்று மாலை காரிமங்கலம் பகுதியில் கனமழை பெய்துள்ளது.

மின்சாரம்

அப்போது மாதம்மாள் வீட்டின் முன்பு மின்கம்பத்தில் இருந்து கொய்யா மரத்திற்கு துணி காய வைக்க ஒரு கம்பி கட்டியுள்ளார். இன்று காலை அந்த கம்பியில் ஈர துணியை மாதம்மாள் காய போட்டுள்ளார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதனை பார்த்த அருகில் இருந்த பெருமாள், சரோஜா ஆகியோர் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்கள் 3 பேர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டது.

இதில் அவர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனே இதுகுறித்து காரிமங்கலம் போலீசாருக்கும், பண்ணந்தூர் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன், மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

ஆம்புலன்ஸ்
மின்சாரம் தாக்கி இறந்த மாதம்மாள், பெருமாள், சரோஜா ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கியதில் தாய், மகன் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web